குன்னூரில் சாலையை மறித்த யானை கூட்டம்.. அரசு பேருந்தை ஓட்டுநர் திருப்பியதால் பயணிகள் ஷாக்!
தமிழகத்தில் அதிக வெயில் காணப்படும் நிலையில் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி ஆறு காட்டு யானைகள் கடந்த இரு வாரங்களாக மேட்டுப்பாளையம் குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றி திரிகிறது.
தேசிய நெடுஞ்சாலை ஓரம் பலாப்பழ சீசன் துவங்கி உள்ளதால் காட்டு யானைகள் கடந்த இரு வாரங்களாக முகாமிட்டிருந்த நிலையில் இன்று ஆறாவது கொண்டை ஊசி வளைவு மற்றும் பத்தாவது கொண்டை ஊசி வளைவில் யானைகள் நிற்பதாக வனத்துறையினருக்கு தகவல் வரவே குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் உத்தரவின்படி வனத்துறையினர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் படிக்க: டெல்லி – சென்னை.. சவுக்கு சங்கர் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பெலிக்ஸ்.. விசாரணையில் இறங்கிய போலீஸ்!
அப்பொழுது பத்தாவது கொண்டை ஊசி வளைவில் ஒற்றை யானை நிற்பதைக் கண்டு பேருந்து ஓட்டுனர் பேருந்தை திருப்பி கீழ்நோக்கி இயக்கினார்.
தற்போது கோடை சீசன் துவங்கிய உள்ள நிலையில் தேசிய நெடுஞ்சாலை செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…
This website uses cookies.