கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த அத்திமுகம் கிராமத்தில் இந்து சமய அறநிலையலத்துறைக்கு கட்டுப்பாட்டில் 13 நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த ஐராதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் கடந்தவாரம் வழக்கம் போல சுவாமிக்கு பூஜைகள் செய்யப்பட்டு மாலை அர்ச்சகர் கோவில் பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று உள்ளார். இந்த நிலையில் அடுத்தநாள் காலையில் வந்து பார்த்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து பேரிகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பேரிகை போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர் விசாரணையில் 300 கிராம் வெள்ளி பொருட்கள் கோவிலில் இருந்து மர்ம நபர்கள் திருடி சென்றது விசாரனையில் தெரியவந்துள்ளது.
இதுக்குறித்து போலிசார் விசாரணை நடத்தி வந்தநிலையில், இன்று காலை கோவிலில் திருடப்பட்ட பொருட்கள் மூட்டையில் கட்டியவாறு கோவில் முன்பே மர்மநபர்கள் வைத்து சென்றுள்ளனர்.
மேலும் படிக்க: கோவிஷீல்டு நிறுவனத்தின் கேன்சர் மருந்துகளை நிறுத்த முடிவு : இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தகவல்!
கோவிலில் திருடப்பட்டவை மீண்டும் கோவில் முன்பே வைத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.