30 அடி உயர மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த கூலி தொழிலாளியை சாலை வசதி இல்லாத காரணத்தினால் தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் பன்றிமலை பகுதியில் வசித்து வரும் பழனிவேல் (வயது 45) என்பவர் ரெட்டர பாறையில் இருந்து மலையாண்டிபுரம் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் மரத்தை வெட்டி சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
எதிர்பாராத விதமாக 30 அடி உயர மரத்திலிருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்துள்ளார் காயமடைந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு வாகனத்தின் மூலமாக அழைத்துச் செல்வதற்கு சாலை வசதிகள் முறையாக இல்லை என்பதால் தொட்டில் கட்டி உடன் பணி செய்து வந்த கூலி தொழிலாளிகள் தூக்கிச் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் பன்றிமலை ரெட்டரபாறையில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் மலையாண்டி புறம் என்ற மலைப் பகுதியில் மலைவாழ் மக்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட வீடுகளுடன் இக்கிராமத்தில் வசித்து வருகிறார்கள் அதேபோல் மலைப்பகுதியில் 100-க்கும் குடியிருப்புகளுடன் தோட்டத்து பகுதிகளும் வசித்து வரும் நிலையில் முறையான சாலை வசதி இல்லாததால் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படும் காலங்களில் அவசர சிகிச்சைக்காக கூட வாகனத்தில் செல்ல முடியாமல் அடிக்கடி இதுபோன்று தொட்டில் கட்டி தூக்கி செல்லும் சம்பவம் இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளார்கள்.
இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் இப்பகுதி மலைவாழ் மக்களின் நலன் கருதி உடனடியாக சாலை வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.