20 ரூபாய்க்காக பறிபோன உயிர்.. டிபன் கடையில் நடந்த MURDER : உருட்டுக் கட்டையால் உயிரை எடுத்த கொடூரம்!
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கொன்னைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் இயேசுராஜ் வயது 50, இவரது மூத்த மகளும், மருமகனும் காவல்துறையில் காவலராக பணியாற்றி வருகின்றனர்.
இதே பகுதியில் ஜோசப் என்பவர் டிபன் கடை நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இயேசுராஜ் என்பவர் ஜோசப் டிபன் கடையில் டிபன் சாப்பிட்டு விட்டு 20 ரூபாய் குறைவாக இருந்ததால் பாக்கி வைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்பு இயேசுராஜ் டிபன் கடைக்கு வந்தபோது, ஜோசப் 20 பாக்கி தரவில்லை என கேட்டுள்ளார் அதற்கு இயேசுராஜ் நான் சாப்பிடவில்லை என கூறியதால் இருவருக்கும் இடையே வாய் தராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ஜோசப் கடையில் இருந்த விறகு கட்டையால் இயேசுராஜ் மண்டையில் அடித்துள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த இயேசுராஜ் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் அங்கு இயேசுராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து டிபன் கடை நடத்திவரும் ஜோசப் என்பவரை தேடி வருகின்றனர். 20 ரூபாய் பாக்கிக்காக கொலை நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.