கோவை : கோவை தொண்டாமுத்தூர் அருகே விராலியூர் கிராமத்தில் ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட் தொண்டாமுத்தூரை அடுத்த விராலியூர் பகுதியில் குடிநீருக்காகவும், உணவிற்காகவும் காட்டுயானைகள் ஊருக்குள் வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் குடிநீருக்காகவும் உணவு தேடியும் விவசாய நிலங்களுக்கு வந்து விளைபொருட்களை உண்பதும் சேதப்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தொண்டாமுத்தூர் அடுத்த விராலியூர் பகுதியில் மூன்று யானைகள் வனப்பகுதியை விட்டு ஊருக்குள் இரவு நேரங்களில் விளைநிலங்கள் வழியே ஊருக்குள் வருவதும் காலை நேரங்களில் மீண்டும் வனப்பகுதிக்கு சென்று வருவதை கண்ட அப்பகுதி விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நேற்று இரவு சுமார் இரண்டரை மணி அளவில் குதிரைகாரர் தோட்டம் என்ற தனியார் தோட்டத்திற்கு வந்த மூன்று யானைகள் விளை நிலங்களின் வழியே ஊருக்குள் வந்து உலா வந்ததுடன் தண்ணீர் போன்றவற்றை பருகிவிட்டு காலையில் விளை நிலங்களின் வழியே வனப்பகுதிக்கு செல்வதை கண்ட விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேலும் விளைநிலங்களை கடந்து செல்லும்போது ஏதேனும் மனித விலங்கு மோதல் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ள நிலையில் வனத்துறையினர் உடனடியாக காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க கண்காணிப்பு பணியை துரிதப்படுத்தி காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.