திருப்பூர் கோவில்வழியை சேர்ந்தவர்கள் பாபு(வயது 47), இளையராஜா(38). பனியன் நிறுவன தொழிலாளர்கள். கொரோனா காலத்தில் பள்ளிக்கு செல்லாமல் இருந்த 15 வயது மாணவியிடம் நைசாக பேசி 2 பேரும் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தாள். அவர்கள் தெற்கு மகளிர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாபு, இளையராஜா ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படியுங்க: தமிழ் மட்டுமே உயிர் மூச்சு… காமராஜரின் தொண்டன் : கடைசி வரை கட்சி மாறாத குமரி அனந்தன்!
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பாபு, இளையராஜா ஆகியோருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி(பொறுப்பு) சுரேஷ்குமார் தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமிலா பானு ஆஜராகி வாதாடினார்.
இந்த வழக்கை சிறப்பாக நடத்தி தண்டனை பெற்றுக்கொடுத்த தெற்கு மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பாராட்டினார்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.