தூத்துக்குடி : காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி தருவைகுளம் அருகே உள்ள அனந்தமட பச்சேரி பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் தங்க முனியசாமி (வயது 28) இவரும் தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள தோவாரந்தை பகுதியை சேர்ந்த கீத்தா செல்வி(வயது 22) என்பரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இரு வீட்டாரின் பெற்றோர்கள் அனுமதியுடன் கடந்த அக்டோபர் 27-ம் தேதி திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையினை தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே திருமணம் முடிந்து சில நாட்களில் இருந்தே அடிக்கடி சின்ன சின்ன பிரச்சினைகள் வந்துள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி சண்டையிட்டு கொள்வதை வழக்கமாக வைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று இவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் வீட்டில் இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற தருவைகுளம் போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே பெற்றோர்கள் விருப்பத்துடன் காதல் திருமணம் செய்து கொண்ட காதலர்கள் 60-நாட்களே சேர்ந்து வாழ்ந்த நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை-யால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சமப்வம் அவர்களது குடும்பதினரிடம் மட்டுமின்றி அந்த ஊர் பொதுமக்களையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.