தூத்துக்குடி : காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி தருவைகுளம் அருகே உள்ள அனந்தமட பச்சேரி பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் தங்க முனியசாமி (வயது 28) இவரும் தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள தோவாரந்தை பகுதியை சேர்ந்த கீத்தா செல்வி(வயது 22) என்பரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இரு வீட்டாரின் பெற்றோர்கள் அனுமதியுடன் கடந்த அக்டோபர் 27-ம் தேதி திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையினை தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே திருமணம் முடிந்து சில நாட்களில் இருந்தே அடிக்கடி சின்ன சின்ன பிரச்சினைகள் வந்துள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி சண்டையிட்டு கொள்வதை வழக்கமாக வைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று இவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் வீட்டில் இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற தருவைகுளம் போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே பெற்றோர்கள் விருப்பத்துடன் காதல் திருமணம் செய்து கொண்ட காதலர்கள் 60-நாட்களே சேர்ந்து வாழ்ந்த நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை-யால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சமப்வம் அவர்களது குடும்பதினரிடம் மட்டுமின்றி அந்த ஊர் பொதுமக்களையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
பிரபல இயக்குநர் சொன்ன கதைப்படி படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு வரவேண்டும் என்பதால் படத்தில் இருந்து விலகியுள்ளார் சூப்பர் ஸ்டார்.…
தேர்தலை நோக்கி விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி விஜய் நடைபோட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இரண்டு…
விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பெரிய திரையில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் யோகி பாபு. டைமிங் காமெடி மூலம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
This website uses cookies.