பல்லடம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது சொகுசு கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியான விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வெட்டுப்பட்டான் குட்டை அருகே உணவகத்தில் பணி புரிந்து வருபவர் அண்ணாதுரை. புதுக்கோட்டையை சேர்ந்த இவர் கடந்த சில வருடங்களாக இங்கு தங்கியிருந்து பணி புரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மதியம் இவர் தங்கியிருந்த அறையில் இருந்து உணவகத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த சொகுசு (இன்னோவா) கார் ஒன்று அவர் மீது மோதியது. மோதிய வேகத்தில் அண்ணாதுரை சாலை ஓரம் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்தார்.
விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் சென்றது.விபத்தினை பார்த்த அபகுதி பொதுமக்கள் அண்ணாதுரையை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பலடம் போலீசார் விபத்து ஏற்படுத்திய வாகனத்தையும் அதில் வந்த நபரையும் தேடி வருகின்றனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.