தமிழகம்

காவலருக்கு கத்திக்குத்து.. மதுரையில் நள்ளிரவில் அரங்கேறிய சம்பவம்!

மதுரையில் பேருந்துக்காக காத்திருந்த காவலரைக் கத்தியால் குத்திய நபரைக் கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர், சென்னை அமைந்தகரை காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று (நவ.11) இரவு தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக மதுரைக்குச் சென்றுள்ளார்.

அப்போது, மதுரை மண்டேலா நகர் சந்திப்பு பகுதியில் காரியாபட்டி செல்லும் பேருந்துக்காக நின்று கொண்டிருந்து உள்ளார். அந்த நேரத்தில், மதுரை சோளங்குரணியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரும் ராஜ்குமார் நிற்கும் பகுதிக்குச் சென்றுள்ளார்.

இதையும் படிங்க: விஜய்க்கு மதுரையில் நெருக்கடி.. கூண்டோடு தூக்கிய நகராட்சி!

இதனையடுத்து, மண்டேலா நகர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் காருக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு வந்து உள்ளார், ஆறுமுகம். அப்போது, ஆறுமுகத்திற்கும், காவலர் ராஜ்குமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றவே, ஆறுமுகம் தான் வைத்திருந்த கத்தியால் காவலரைக் குத்தியுள்ளார்.

இதனால் காயம் அடைந்த ராஜ்குமார், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு, வீடு திரும்பி உள்ளார். பின்னர், இது குறித்து அவனியாபுரம் காவல் நிலையத்தில் ராஜ்குமார் புகார் அளித்து உள்ளார். இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஆறுமுகம் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

14 hours ago

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

16 hours ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

16 hours ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

16 hours ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

17 hours ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

18 hours ago

This website uses cookies.