மதுரையில் பேருந்துக்காக காத்திருந்த காவலரைக் கத்தியால் குத்திய நபரைக் கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர், சென்னை அமைந்தகரை காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று (நவ.11) இரவு தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக மதுரைக்குச் சென்றுள்ளார்.
அப்போது, மதுரை மண்டேலா நகர் சந்திப்பு பகுதியில் காரியாபட்டி செல்லும் பேருந்துக்காக நின்று கொண்டிருந்து உள்ளார். அந்த நேரத்தில், மதுரை சோளங்குரணியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரும் ராஜ்குமார் நிற்கும் பகுதிக்குச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: விஜய்க்கு மதுரையில் நெருக்கடி.. கூண்டோடு தூக்கிய நகராட்சி!
இதனையடுத்து, மண்டேலா நகர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் காருக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு வந்து உள்ளார், ஆறுமுகம். அப்போது, ஆறுமுகத்திற்கும், காவலர் ராஜ்குமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றவே, ஆறுமுகம் தான் வைத்திருந்த கத்தியால் காவலரைக் குத்தியுள்ளார்.
இதனால் காயம் அடைந்த ராஜ்குமார், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு, வீடு திரும்பி உள்ளார். பின்னர், இது குறித்து அவனியாபுரம் காவல் நிலையத்தில் ராஜ்குமார் புகார் அளித்து உள்ளார். இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஆறுமுகம் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.