தமிழகம்

படுக்கையறை வரை சென்ற பால்ய நண்பன்.. ஸ்குரு டிரைவரால் குத்திக் கொலை செய்த கொடூரம்!

சென்னையில் நண்பரின் மனைவியுடன் பழகிய நண்பரைக் கொலை செய்து சாக்கு மூட்டையில் வீசிச் சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை: சென்னை, கொருக்குப்பேட்டை பிபிசிஎல் அருகே ரத்தக்கரையுடன் ஒரு சாக்கு மூட்டை கிடந்துள்ளது. மேலும், அந்த சாக்கு முட்டையில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. எனவே, இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதன்படி சம்பவம் இடத்திற்குச் சென்ற போலீசார், அந்த மூட்டையைப் பிரித்து பார்த்துள்ளனர். அப்போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ரத்தக் காயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதனையடுத்து, அவரது உடலை மீட்ட போலீசார், அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சாக்கு மூட்டையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டவர், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், சிறு வயதிலிருந்தே சதீஷ்குமாரும், கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சரத்குமார் என்பவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில், சதீஷ்குமார் தனது நண்பர் சரத்குமாரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, சரத்குமாரின் மனைவிக்கும், சதீஷ்குமாருக்கும் இடையே திருமணத்தை மீறிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது ஒருகட்டத்தில் சரத்குமாருக்கு தெரிய வந்துள்ளது. எனவே, இது தொடர்பாக தனது நண்பரையும், மனைவியையும் சரத்குமார் கண்டித்துள்ளார்.

இதையும் படிங்க: ‘ஜனநாயகன்’ படத்தில் களமிறங்கும் முக்கிய இயக்குனர்கள்…விஜய் போட்ட ஸ்கெட்ச்சா.!

இந்த நிலையில், கடந்த மார்ச் 3ஆம் தேதி சதீஷ்குமார், சரத்குமாரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த சரத்குமாருக்கும் சதீஷ்குமாருக்கும இடையே பெரிய தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்கே சென்ற சரத்குமார், வீட்டிலிருந்த ஸ்குரு டிரைவர் மற்றும் கத்தியால் சதீஷ்குமாரை குத்திக் கொலை செய்துள்ளார்.

பின்னர், அவரது உடலை சாக்கு முட்டையில் கட்டி வீசியுள்ளார். இதனையடுத்து, சரத்குமாரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Hariharasudhan R

Recent Posts

முன்னாடியே இது நடந்திருக்கு, ஆனா இதான் ஃபர்ஸ்ட் டைம்? ரெட்ரோ படத்தை பிரித்து மேய்ந்த பயில்வான்!

ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…

36 minutes ago

கதறி அழுத பிரியங்கா தேஷ்பாண்டே… 2வது திருமணத்திற்கு பிறகு நடந்த சம்பவம்!

விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…

56 minutes ago

‘கயல்’ சீரியல் நடிகை தற்கொலை முயற்சி? கணவருடன் மனக்கசப்பு?!

கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் பிரைம்…

1 hour ago

கங்குவா வசூலை கூட தாண்டாத ரெட்ரோ… சூர்யாவுக்கு வந்த சோதனை!

சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் கங்குவா படத்திற்கு பிறகு…

1 hour ago

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

2 days ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

2 days ago

This website uses cookies.