திருச்சியில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி: திருச்சி மாவட்டம், வடக்கு தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் செல்போன் டவர் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தனலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தன்லட்சுமி, அழகு நிலைய உரிமையாளர் ஆவார்.
இந்த நிலையில், தனலட்சுமி நேற்று முன்தினம் வழக்கம் போல் கடைக்குச் சென்றுள்ளார். பின்னர், வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, கனகராஜ் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்துள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத மனைவி தனலட்சுமி, கணவரைப் பார்த்து கதறி அழுதுள்ளார்.
இதனையடுத்து, இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று, கனகராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: ஒரே நாளில் மளமளவென குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் கனகராஜ் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. மேலும், இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.