கோவை : ஓடும் ரயில் தவறி விழுந்த முதியவரை கண் இமைக்கும் நேரத்தில் உடனடியாக காப்பாற்றிய ரயில்வே போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சேலத்தை சேர்ந்த சிவகுமார் என்பவர் கேரளா கண்ணூர் சென்று கோயமுத்தூர் திரும்பியிருக்கின்றார். கோயமுத்தூரில் இறங்க வேண்டிய அவர் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுள்ளார். ரயில் கோவை ரயில் நிலையம் வந்து, பின்னர் புறப்படும் போது உடனடியாக அவர் விழித்துக்கொண்டு ஓடும் ரயிலிலிருந்து இறங்க முயன்றார்.
அப்போது, நிலை தடுமாறு கீழே விழுந்தார். இதனால், தண்டவாளத்துக்கு அடியில் தடுமாறி விழுந்தார். அப்போது, பணியில் இருந்த ரயில்வே இருப்பு பாதை காவல் நிலைய குற்றப்பிரிவு தலைமை காவலர் (203) ரமேஷ், காவலர் (1025) மாரிமுத்து, மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் அருண்ஜித், பெண் தலைமை காவலர் மினி, ஆகியோர் தண்டவாளத்தில் விழுந்த நபரான சேலத்தை சேர்ந்த சிவகுமாரை கண் இமைக்கும் நேரத்தில் காப்பாற்றினர். இதனால் சிவகுமார் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
பின்னர், அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கண் இமைக்கும் நேரத்தில் விபத்துக்குள்ளான நபரை லாவகமாக காப்பாற்றிய கோயமுத்தூர் ரயில்வே காவலர்களை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.