கரூர் : மன வளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 58 வயது முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்த கரூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கரூர் சோமூர் பகுதியைச் சேர்ந்த மன வளர்ச்சி குன்றிய 28 வயது பெண் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 58 வயதான அர்ஜூனன், கடந்த 2020 ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி அன்று அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.
இது குறித்த கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசில் மன வளர்ச்சி குன்றிய பெண்ணின் தாயார் புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீசார் அர்ஜுனனை கைது செய்தது,தொடர்ந்து வழக்கானது கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கின் சாட்சியங்களை விசாரணை செய்து, குற்றம் சாட்டப்பட்ட முதியவர் அர்ஜுனனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு இன்று தீர்ப்பளித்தார்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.