நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் ஏறிய முதியவரின் திருடுபோன தொலைபேசியை அவரது மகன் கூகுள் மேப்பின் உதவியுடன் திருடனை கண்டுபிடித்த சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த ராமன்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ பகத். இவர் தொழில்நுட்ப வல்லுநராக வேலை செய்து வருகிறார். இவரது தந்தை பழனிசாமி ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் அதிகாரியாக இருந்து வருகிறார். மேலும், சிஐடியு தொழிற்சங்கத்தில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை நாகர்கோவிலில் இருந்து திருச்சி செல்வதற்காக கச்சேகுடா எக்ஸ்பிரஸ் ரயிலில் சுமார் அதிகாலை 1.45 மணி அளவில் ரயிலில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து ஏறினார். ரயிலில் போதுமான அளவு கூட்டமில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருடன் ஒரு நபர் குடிபோதையில் ரயிலில் ஏறியதாகவும் கூறப்படுகிறது.
ரயில் திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தபோது, பழனிச்சாமியின் பை மற்றும் பையில் வைத்திருந்த தொலைபேசியை காணவில்லை. ரயில் கோவில்பட்டி வந்ததும் தனது பையை தேடினார் பழனிச்சாமி. பை இல்லாததை
கண்டு அதிர்ச்சி அடைந்தார் பழனிச்சாமி. உடனே தனது மகனான ராஜபகத்திற்கு அருகில் இருப்பவரிடம் தொலைபேசியை வாங்கி தனது தொலைபேசி தொலைந்ததை தனது மகனிடம் கூறியுள்ளார்.
இந்த நிலையில், ராஜ்பகத் தனது உறவினர்கள் யார் எங்கு சென்றாலும், அவர்கள் இங்கு இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்கு கூகுள் மேப்பில் உள்ள லொக்கேஷன் ஆன் செய்து வைப்பது வழக்கமாக வைத்துள்ளார். இந்த லொக்கேஷன் ஆன் செய்து வைத்ததன் மூலம் தொலைபேசி எங்கு இருக்கிறது என்று கண்டுபிடிக்க இயலும். தனது தந்தை கூறியதும் உடனே ராஜ பகத் தனது நண்பருடன் லொகேஷனை தனது தொலைபேசியில் பார்த்துள்ளார். அப்போது லொகேஷன் திருநெல்வேலி பகுதியில் இருந்துள்ளது.
தொடர்ந்து திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்து நகர்ந்துவந்தது. இதை கண்டதும் செல்ஃபோன் திருடு போனது உறுதி செய்யப்பட்டது. இந்த தொலைபேசியை எடுத்த நபர் திருநெல்வேலியில் இறங்கி கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் திரும்பி நாகர்கோவிலில் வந்தது லொகேஷன் டிராக் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே ரயில் நாகர்கோவில் ரயில் நிலையம் அதிகாலை வந்ததும் அங்கு போய் ராஜபகத் பார்த்துள்ளார். அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் திருடனை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால் தொடந்து லொகேஷன் நகர்ந்து கொண்டே இருந்தது.
லொகேஷனை பின் தொடந்த ராஜ பகத் இறுதியாக நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் வைத்து திருடனை பிடித்துள்ளார். உடனே காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீசார் வந்து விசாரித்த போது திருடன் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. திருடனை விசாரித்த போலீசார் அவன் திருடிய தொலைபேசி, 1000 ரூபாய் ரொக்க பணம், சார்ஜர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து குடிபோதையில் இருந்ததால் இந்த நபர் முன்னுக்கு பின் முரணாகவே பேசி உள்ளார். தொலைபேசி கிடைத்ததால் ராஜபகத் புகார் அளிக்கவில்லை. அதனால், காவல்துறையினர் இது குறித்து மேல் நடவடிக்கை எதும் எடுக்கவில்லை. ரயில், பேருந்தில் பயணம் செய்யும்போது இந்த கூகுள் மேப் லொகேஷனை உறவினர்களுக்கும் அனுப்பும்போது நாம் எங்கு இருக்கிறோம் என்ற விபரம் தெரியவரும். மேலும் இந்த மாதிரியான சம்பவங்கள் எதும் நடை பெறாது என பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.