தமிழகம்

அதெப்படி அவன் மட்டும்.. ஊரே சேர்ந்து ஒருவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கொடூரம்! காரணம் இதுவா?

ஊருக்கே செய்வினை வைத்து பொருளாதார ரீதியில் பின்னுக்குத் தள்ளியதாக ஊரே சேர்ந்து ஒருவரை பெட்ரோல் எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம், அரக்கு மலை பகுதியில் உள்ளது தொம்புரிகுடா என்ற கிராமம். இந்தக் கிராமத்தில் அடாரி தொம்புரு (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாந்திரீக பூஜைகள் செய்து வந்துள்ளார். இந்த தொம்புரிகுடா கிராமத்தில் மொத்தம் 15 வீடுகள் உள்ளன.

இவற்றில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், தங்களது குடும்பங்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்க, அடாரி தொம்புரு குடும்பமே காரணம் என மக்கள் நினைத்து அவர் மீது கடும் கோபம் அடைந்துள்ளனர். அதேநேரம், அடாரி தொம்புரு பொருளாதார ரீதியில் முன்னேற்றம் கண்டே இருந்துள்ளார்.

ஏற்கனவே அடாரி தொம்புரு மாந்தீரிக வேலையைச் செய்து வருவதால், மொத்த கிராமத்துக்கும் செய்வினை வைத்துவிட்டு, தன்னை மட்டும் பொருளாதாரத்தில் மேம்படுத்தி, மற்றவர்களை தன்வசப்படுத்தி, அதன் மூலம் மேலும் வசதியாக அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கிராம மக்கள் கருதியுள்ளனர்.

இந்த நிலையில், அடாரி தொம்புருவை கிராம மக்கள் சேர்ந்து, வீட்டுக்கு வெளியே தரதரவென இழுத்து வந்துள்ளனர். பின்னர், கற்கள், கட்டைகளால் தாக்கியுள்ளனர். பிறகு, கொடூரத்தின் உச்சமாக அவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றுள்ளனர். இதனையடுத்து, இது தொடர்பாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: என்கிட்ட நிறைய பேர் தப்பா நடந்திருக்காங்க.. கதறி அழுத வரலட்சுமி சரத்குமார்!

எனவே, இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த ஊரைச் சேர்ந்த 5 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு மாந்திரீக பூஜை செய்து வந்த நபரால்தான் தாங்கள் கஷ்டங்களை அனுபவிப்பதாகக் கருதி, அந்த நபரைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையான அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழில்…

13 hours ago

செல்ஃபோனை 3 நாட்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்த சமந்தா? அவருக்குள்ள இப்படி ஒரு யோசனையா?

டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலங்களில் வலம் வருபவர் சமந்தா. கடந்த 2022 ஆம் ஆண்டு தனக்கு…

13 hours ago

கஞ்சா வாங்க ஒடிசா போன தமிழக இளைஞர்? தாய்க்கு வந்த போன் கால் : ஷாக் சம்பவம்!

திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரி ஜோதி என்பவரின் இரண்டாவது மகன் அஜய்(22). இவர் நண்பர்களுடன்…

14 hours ago

ரேஸ் காருக்குள் குழந்தையை வைத்து விளையாட்டு காட்டிய AK? இணையத்தில் வெளியான கியூட் வீடியோ!

ரேஸர் அஜித்குமார் அஜித்குமார் தற்போது உலக நாடுகள் பலவற்றில் கார் பந்தயங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார். சில…

14 hours ago

முதல் நாளிலேயே குப்புற கவிழ்ந்த ஃபீனிக்ஸ்? வீழான்னு சொல்லிட்டு இப்படி விழுந்து கிடக்குறீங்களே!

பீனிக்ஸ் விழான்? விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் “பீனிக்ஸ்”. இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…

15 hours ago

அஜித் கொலைக்கு பின் தனிப்படையை கலைத்துள்ளார் CM.. ஆனால் நிகிதா : கூட்டணி கட்சி பிரமுகர் பரபரப்பு!

அஜித் குமார் கொலைக்கு பிறகு தனிப்படையை அரசு கலைத்திருப்பது வரவேற்கத்தக்கது.மடப்புரத்தில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதையும் படியுங்க: திமுக…

16 hours ago

This website uses cookies.