தமிழகம்

தென்காசியில் தலை துண்டித்து ஒருவர் கொலை.. அதிர்ச்சியில் தென்மாவட்டங்கள்!

தென்காசியில் 45 வயது நபர் ஒருவர் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி: தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கருத்த பிள்ளையூர் அந்தோணியார் தெருவைச் சேர்ந்தவர் அருள். இவரது மகன் சொக்கன் என்ற இருதயராஜ் (45). இவர் ஆதரியானூர் பகுதியில் உள்ள அச்சங்குளம் – கள்ளத்திகுளம் பகுதியில் மீன் பாசி குத்தகைக்கு எடுத்து உள்ளார்.

மேலும், இவர் இரவு நேரத்தில் குளத்துக் கரையில் காவல் இருப்பதை வழக்கமாகக் கொண்டு உள்ளார். அந்த வகையில், நேற்று இரவும் சொக்கன் காவலில் இருந்துள்ளார். அப்போது திடீரென அங்கு வந்த மர்ம நபர்கள், சொக்கனை அரிவாளால் தாக்கியது மட்டுமல்லாமல், அவரது தலையைத் துண்டித்து கொலை செய்துள்ளனர்.

பின்னர், இது குறித்து தகவல் அறிந்த ஆழ்வார்குறிச்சி போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று, சொக்கனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.

தொடர்ந்து விசாரணை நடத்திய அவர்கள், பாதுகாப்பு பணிக்கு சில காவலர்களை நியமித்துவிட்டுச் சென்றுள்ளனர். மேலும், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சொத்துப் பிரச்னை காரணமாக இந்தக் கொலை சம்பவம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: மேஸ்திரியுடன் தகாத உறவு.. கணவனை நூதனமாக கொன்ற மனைவி!

இதனைத் தொடர்ந்து, கொலை செய்த மர்ம நபர்களை செல்போன் எண்களைக் கொண்டு போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். முன்னதாக, அருகில் உள்ள நெல்லை மாவட்டத்தில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராக வந்த மாயாண்டி மற்றும் சட்டக்கல்லூரி மாணவர் மாயாண்டி ஆகிய இருவரும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 day ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 day ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

1 day ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

1 day ago

This website uses cookies.