தமிழகம்

தென்காசியில் தலை துண்டித்து ஒருவர் கொலை.. அதிர்ச்சியில் தென்மாவட்டங்கள்!

தென்காசியில் 45 வயது நபர் ஒருவர் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி: தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கருத்த பிள்ளையூர் அந்தோணியார் தெருவைச் சேர்ந்தவர் அருள். இவரது மகன் சொக்கன் என்ற இருதயராஜ் (45). இவர் ஆதரியானூர் பகுதியில் உள்ள அச்சங்குளம் – கள்ளத்திகுளம் பகுதியில் மீன் பாசி குத்தகைக்கு எடுத்து உள்ளார்.

மேலும், இவர் இரவு நேரத்தில் குளத்துக் கரையில் காவல் இருப்பதை வழக்கமாகக் கொண்டு உள்ளார். அந்த வகையில், நேற்று இரவும் சொக்கன் காவலில் இருந்துள்ளார். அப்போது திடீரென அங்கு வந்த மர்ம நபர்கள், சொக்கனை அரிவாளால் தாக்கியது மட்டுமல்லாமல், அவரது தலையைத் துண்டித்து கொலை செய்துள்ளனர்.

பின்னர், இது குறித்து தகவல் அறிந்த ஆழ்வார்குறிச்சி போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று, சொக்கனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.

தொடர்ந்து விசாரணை நடத்திய அவர்கள், பாதுகாப்பு பணிக்கு சில காவலர்களை நியமித்துவிட்டுச் சென்றுள்ளனர். மேலும், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சொத்துப் பிரச்னை காரணமாக இந்தக் கொலை சம்பவம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: மேஸ்திரியுடன் தகாத உறவு.. கணவனை நூதனமாக கொன்ற மனைவி!

இதனைத் தொடர்ந்து, கொலை செய்த மர்ம நபர்களை செல்போன் எண்களைக் கொண்டு போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். முன்னதாக, அருகில் உள்ள நெல்லை மாவட்டத்தில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராக வந்த மாயாண்டி மற்றும் சட்டக்கல்லூரி மாணவர் மாயாண்டி ஆகிய இருவரும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

13 hours ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

14 hours ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

14 hours ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

14 hours ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

14 hours ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

15 hours ago

This website uses cookies.