கோவை ; கோவை செல்வபுரம் பகுதியில் முத்துராஜ் என்பவரது இருசக்கர வாகனத்தை தீவைத்து எரித்து விட்டு தப்பி ஓடிய நாசர் என்பவரை செல்வபுரம் போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை மைக்கல் பகுதியைச் சேர்ந்தவர் நாசர். இவர் மீது இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு உட்பட பல வழக்குகள் உள்ளன. நாசரின் இரண்டாவது மனைவி சமீரா, கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள மகேஸ்வரி என்பவரது சிப்ஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். நாசர் முதல் மனைவி வீட்டிலேயே இருந்து விடுவார், உனது வீட்டிற்கு வர மாட்டார் என கடை உரிமையாளர் மகேஸ்வரி, சமீராவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் சமீரா கடந்த ஒரு வாரமாக நாசரிடம் சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாசர் மகேஸ்வரியை போனில் அழைத்து திட்டியுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை மகேஸ்வரியின் வீட்டிற்கு சென்ற நாசரின் , மகேஸ்வரியின் மகன்
முத்துராஜின் இருசக்கர வாகனத்தை தீவைத்து எரித்து விட்டு தப்பி ஓடினார். வாகனம் தீப்பிடித்து எரிவதை பார்த்த மகேஸ்வரி உடனடியாக தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால் தீயில் முழுமையாக இரு சக்கரவாகனம் எரிந்து நாசமானது.
இதுகுறித்து உடனடியாக செல்வபுரம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமுறைவாகியுள்ள நாசரை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தன்னை பற்றி மனைவியிடம் தவறாக சொன்னார் என்பதற்காக இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…
இந்த மாதம் விஜய் டிவி பிரபலங்களுக்கான மாதம் என சொல்வது போல, அடுத்தடுத்து விஜய் டிவி பிரபலங்கள் திருமணம் செய்து…
டாப் நடிகர் அஜித் படத்தில் நடிப்பது என்பது பலருக்கும் கனவே. பலரும் அஜித் படத்தில் ஒரு காட்சியிலாவது தலையை காட்டிவிட…
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு உய்ப்பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு சிஆர்பிஎப்…
This website uses cookies.