கள்ளத்தனமாக மது விற்க வேண்டும் என போலீசார் வற்புறுத்தியதாலே தான் தற்கொலை செய்து கொண்டதாக சிக்கிய கடிதத்தால் ராஜபாளையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள நக்கனேரி பகுதியைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (40). விபத்தில் கைகளை இழந்ததால், இவர் 60 சதவீத மாற்றுத்திறனாளியாக இருந்தார். மேலும், இவர் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி வந்து, சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், இதற்காக காவல்துறையினருக்கும் அவ்வப்போது குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக கொடுத்து வந்ததாகவும் தெரிகிறது. இருப்பினும், மாத இலக்குக்காக கள்ளத்தனமாக மது விற்பனை வழக்கின் பேரில், செல்வக்குமாரை அடிக்கடி போலீசார் கைது செய்துள்ளனர். இதனை அறிந்த ஊர் மக்கள், செல்வக்குமார் இனி மது விற்பனையில் ஈடுபடக் கூடாது என கட்டுப்பாடு விதித்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே, அவர் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யாமல் வேறு ஒரு வேலைக்குச் சென்று வந்துள்ளார். இந்த நிலையில், சேத்தூர் ஊரக காவல் நிலைய தலைமைக் காவலரான செல்வின், செல்வக்குமாரை கள்ளத்தனமாக மது விற்பனை செய்யச் சொல்லி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால், அதற்கு செல்வக்குமார் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த டிசம்பர் 22ஆம் தேதி, தான் அருந்துவதற்காக செல்வக்குமார் மதுபாட்டில்கள் வாங்கிக் கொண்டு தனது ஸ்கூட்டரில் ஊர் திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டருகே செல்வக்குமாரை தடுத்து நிறுத்திய காவலர் செல்வின், அவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது.
அப்போது, இதனை வீடியோ எடுக்க முயன்ற செல்வக்குமாரின் மனைவியையும் தாக்கியதோடு, பாலியல் ரீதியில் தவறாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று செல்வக்குமாரின் மனைவி வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த செல்வக்குமார், தற்கொலை செய்யும் முடிவெடுத்து, தன் சாவுக்குக் காரணம் காவலர் செல்வின் தான் எனக் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இதையும் படிங்க: எங்க ஓடவா பார்க்க.. டிரோன் மூலம் விரட்டிய கிராம மக்கள்.. செங்கல்பட்டில் மிரட்டிய சம்பவம்!
பின்னர், இது குறித்த தகவல் அறிந்த போலீசார் விசாரணைக்கு வந்தபோது, அவர்களைத் தடுத்து நிறுத்திய உறவினர்கள், திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, குற்றம் சாட்டப்பட்ட காவலர் செல்வின் மீது நடவடிக்கை எடுக்காமல், செல்வக்குமாரின் உடலை எடுத்துச் செல்ல விடமாட்டோம் எனக் கூறி தடுத்துள்ளனர்.
அப்போது, சமரசம் பேசிய சரக காவல் துணை கண்காணிப்பாளர் ப்ரீத்தி, உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்ததையடுத்து, செல்வக்குமாரின் உடல் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.