சீன நிறுவனம் தயாரித்த மொபைலை OPPO போன் என போலி பில் தயாரித்து விற்பனை : பொதுமக்கள் பிடியில் சிக்கிய வடமாநில இளைஞர்!
திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள செல்போன் கடையில் ஹரிகிருஷ்ணன் என்பவர் செல்போன் வாங்க சென்றுள்ளார் அப்போது கடையின் வெளியே இருந்த வடமாநில இளைஞர் புது செல்போன் வாங்கி தற்போது அவசர தேவைக்காக விற்பனை செய்வதாக தெரிவித்து பில் காட்டியுள்ளார்.
அதனை பெற்றுக் கொண்ட ஹரிகிருஷ்ணன் 8500 கொடுத்து செல்போனை வாங்கி உள்ளார். சில நிமிடங்களில் செல்போன் போலியான சைனா போன் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மீண்டும் அங்கு சென்ற ஹரிகிருஷ்ணன் அங்கிருந்த வடமாநில இளைஞரை பிடித்து கேட்ட போது தப்பி ஓட முயன்றுள்ளார். இதனையடுத்து ஹரிகிருஷ்ணன் சப்தம் எழுப்பியதை தொடர்ந்து அங்கிருந்து பொதுமக்கள் வடமாநில இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர் அங்கு வந்த திருப்பூர் தெற்கு போலீசார் வடமாநில இளைஞரையும் ஹயிகிருஷ்ணனையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.