சென்னை, காசிமேடு பகுதியில் வீடு புகுந்த கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை: சென்னை, காசிமேடு திடீர் நகர் 3வது தெருவில் வசித்து வருபவர் லோகநாதன் (33). இவர் மீது ஏற்கனவே காசிமேடு மீன்பிடித் துறைமுக காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், வீட்டில் லோகநாதனும், அவரோடு சேர்ந்து வாழ்ந்து வரும் மாலதி (48) என்ற பெண்ணும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.
அப்போது, திடீரென வீட்டில் உள்ளே நுழைந்த 6 பேர் கொண்ட கும்பல், லோகநாதனை சரமாரியாக வெட்டி உள்ளது. மேலும், உடனிருந்த மாலதியையும் சரமாரியாகத் தாக்கியதில் அவர் நிலை குலைந்து கீழே விழுந்தார். இதனையடுத்து, அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினரைக் கண்ட மர்ம கும்பல், தப்பி ஓடி உள்ளனர்.
இதனையடுத்து, இது குறித்து அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாலதியை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், உயிரிழந்த லோகநாதனின் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பான விசாரணையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, அதே பகுதியில் தேசியா என்ற ரவுடி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: வெளுத்து வாங்கும் மதகஜராஜா…. காணாமல் போன பிரம்மாண்ட இயக்குனர்…!
அப்போது அந்த வழக்கில் லோகநாதன் பெயரும் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தேசியாவின் உறவினர்கள் யாரேனும் இதில் ஈடுபட்டார்களா அல்லது வேறு நபர்கள் யாரேனும் கொலை செய்தார்களா என்ற கோணத்தில் காசிமேடு மீன்பிடித் துறைமுக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.