சென்னை, காசிமேடு பகுதியில் வீடு புகுந்த கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை: சென்னை, காசிமேடு திடீர் நகர் 3வது தெருவில் வசித்து வருபவர் லோகநாதன் (33). இவர் மீது ஏற்கனவே காசிமேடு மீன்பிடித் துறைமுக காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், வீட்டில் லோகநாதனும், அவரோடு சேர்ந்து வாழ்ந்து வரும் மாலதி (48) என்ற பெண்ணும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.
அப்போது, திடீரென வீட்டில் உள்ளே நுழைந்த 6 பேர் கொண்ட கும்பல், லோகநாதனை சரமாரியாக வெட்டி உள்ளது. மேலும், உடனிருந்த மாலதியையும் சரமாரியாகத் தாக்கியதில் அவர் நிலை குலைந்து கீழே விழுந்தார். இதனையடுத்து, அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினரைக் கண்ட மர்ம கும்பல், தப்பி ஓடி உள்ளனர்.
இதனையடுத்து, இது குறித்து அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாலதியை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், உயிரிழந்த லோகநாதனின் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பான விசாரணையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, அதே பகுதியில் தேசியா என்ற ரவுடி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: வெளுத்து வாங்கும் மதகஜராஜா…. காணாமல் போன பிரம்மாண்ட இயக்குனர்…!
அப்போது அந்த வழக்கில் லோகநாதன் பெயரும் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தேசியாவின் உறவினர்கள் யாரேனும் இதில் ஈடுபட்டார்களா அல்லது வேறு நபர்கள் யாரேனும் கொலை செய்தார்களா என்ற கோணத்தில் காசிமேடு மீன்பிடித் துறைமுக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.