திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த ராயபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் இவர் திருப்பூர் அண்ணா நகர் பகுதியில் வணிக நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் புதிய ஆட்டோ பார்க்கிங் வசதி உள்ள சொகுசு காரை வாங்கி உள்ளார்.
அதன் மூலம் தனது நிறுவனத்தில் பலமுறை காரை ஆட்டோ பார்க்கிங் வசதியில் தானாகவே இயங்கும் வகையில் நிறுத்தி உள்ளார். கடந்த வாரம் இவர் தனது நிறுவனத்தில் இடத்தில் காரை நிறுத்தி நண்பர்களுக்கு ஆட்டோ பார்க்கிங் சிஸ்டம் குறித்து விவரித்துள்ளார்.
மேலும் ஆட்டோ பார்க்கிங் முறையில் காரை இயக்க முயன்றுள்ளார். ஆனால் கார் பாதியில் நின்றதால் கதவை திறந்து பார்த்துள்ளார். அம்போது கார் தானாகவே பின்னோக்கி சென்றது இதனைத் தொடர்ந்து அவர் காரை நிறுத்த முயன்றுள்ளார் ஆனால் கார் கதவு அவர் மீது வேகமாக மோதியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் காலில் கார் சக்கரங்கள் ஏறி இறங்கியது. இதை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் காரை நிறுத்தி செந்தில்குமாரை மீட்டு கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.