காஞ்சிபுரம் அடுத்துள்ள சின்னயங்குளம் பகுதியில் புதிதாக பெட்ரோல் பங்க் சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும் என்பதால் பல்வேறு பகுதியில் இருந்து வருகின்ற வாகனங்கள் இரவு நேரத்திலும் பெட்ரோல் மற்றும் டீசல் போட்டுக்கொண்டு சென்று வருகின்றன.
இதையும் படியுங்க: பாஜக பெண் பிரமுகர் தலை துண்டித்து கொலை… ஓட ஓட விரட்டி கொன்ற மகன்? ஷாக் தகவல்!
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் பெரியார் நகர் பகுதியில் இருந்து வந்த காரில் வந்த நபர் பெட்ரோல் பங்குக்கு நுழைந்து பணியாளர்கள் இல்லாததால் நேரடியாக பெட்ரோலை நிரப்ப முயன்ற போது, முடியாததால் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த பணியாளரை எழுப்பி 3000 ரூபாய்க்கு பெட்ரோலை போட கூறியுள்ளார்.
அதன்படி காரில் நிரப்பிய பெட்ரோலுக்கு உண்டான 3000 ரூபாய் பணத்துக்கு பதில் ஏடிஎம் கார்டை அளித்துள்ளார். அந்த ஏடிஎம் கார்டை பணியாளர் பயன்படுத்த முயன்ற போது அது காலாவதி ஆகிவிட்டது தெரிய வந்தது.
பயன்பாட்டில் இல்லாத செயல்படாத ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு பணத்தை அளிக்காமல் காரில் வந்த நபர் வேகமாக தப்பி சென்றுள்ளார்.
3000 ரூபாய்க்கு காரில் பெட்ரோல் நிரப்பிய பின் பணத்தை அளிக்காமல் அந்த நபர் தப்பி செல்லும் சிசிடிவி காட்சி அடிப்படையில் பங்க் உரிமையாளர் புருஷோத்தமன் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் காரில் வந்த நபரை குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
பிரபலங்கள் திருமணம், கர்ப்பம், புதிய கார், பைக் வாங்கவததை சமூகவலைதளங்களில் பதிவிட்டு ரசிர்கர்களிடம் வாழ்த்துகளை பெற்று வருகின்றனர். இதையும் படியுங்க:…
This website uses cookies.