அரசு ஆரம்ப சுகாதார நிலையம் : தடுப்பூசி போட பச்சிளம் குழந்தைகளை தூக்கி வரும் பெற்றோர் – அலைக்கழிக்கும் செவிலியர்களின் வீடியோ காட்சிகள் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை செல்வபுரம் பத்ரகாளியம்மன் கோவில் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்துக்கு பச்சிளம் குழந்தைகளை தூக்கிக் கொண்டு தடுப்பூசி போட வரும் தாய்மார்களை அங்கு உள்ள செவிலியர்கள் அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது.
ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த செவிலியர், சுகாதார மையத்தில் இல்லாமல் வேறு இடங்களில் இருக்கும் பொழுது அந்த இடத்திற்கு தடுப்பூசி போட குழந்தைகளை தூக்கி வர சொல்கின்றனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி கைவசம் இல்லை எனவும், சுகாதார மையத்தின் செவிலியர் இருக்கும் இடத்தில் ஊசி இருப்பதாகவும் கூறி ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை அலை கழிப்பதாக கூறப்படுகின்றது.
தடுப்பூசி போட குழந்தையை தூக்கிக் கொண்டு வந்த நபர் ஒருவர் இந்த காட்சிகளை செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார். இந்த காட்சிகள் வைரலாகி வருகின்றது. பச்சிளம் குழந்தைகளை தூக்கி வந்த பெற்றோர்,
ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே மருந்து இல்லை என சொல்கின்றனர் என ஆதங்கத்தை தெரிவிக்கும் காட்சிகள் அதில் இடம்பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.