தர்மபுரி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமாரசாமிபேட்டை பகுதியில் சுமார் 25 மதிக்கத்தக்க இளைஞர் தலைமை காவலர் சீருடை அணிந்து மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் சத்தம் போட்டுக் கொண்டு வந்தார்.
அங்கிருந்த இளநீர் கடையில் அரிவாள் எடுத்து அக்கம் பக்கம் இருந்தவர்களை துரத்தி உள்ளார். அப்போது அங்கே இருந்த ஜெபகன்னி -35 என்ற நபரின் கைவிரல்களை வெட்டியுள்ளார்.
பிறகு அங்கிருந்து பொதுமக்கள் அவரை துரத்தியபோது அருகில் இருந்த குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணி கோயிலில் நுழைந்தவர் கோவிலில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த ராஜேஸ்வரி (55)என்ற பெண்ணை அரிவாளால் கொடூரமாக வெட்டி உள்ளார்.
பிறகு அங்கிருந்தவர்கள் அவரை கோவில் அறையில் வைத்து பூட்டி உள்ளனர். பிறகு போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது, ஓசூரில் இருந்து வருவதாகவும் அங்கு வெயிலில் காய வைக்கப்பட்டிருந்த தலைமை காவலர் சீருடையை அணிந்து கொண்டு வந்ததாகவும் சீருடையை தைத்தவரின் முகவரியில் தர்மபுரி ஆயுதப்படை அருகில் உள்ள கே.ஆர்.என் டைலர் பெயர் உள்ளது.
தனது பெயர் சித்திக் விக்னேஷ் (23) செம்மேரிகுளம், திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம் என்று காவல்துறையினர் விசாரணையில் கூறியுள்ளார்.இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.