கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொது இடங்களில் குப்பைகளை கொட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக பொது இடங்களில் வைக்கப்பட்டு இருந்த குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டு வீடு, வீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தனித் தனியாக பிரிக்கப்பட்டு சேகரிக்கப்பட்டு வருகிறது.
பொது இடத்தில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உத்தரவின் பேரில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் தீவிர ஆய்வும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நஞ்சுண்டாபுரம் சாலை ஓரத்தில் ஒருவர் காரில் வந்து குப்பை கொட்டுவதாக சுகாதாரத்துறை ஆய்வாளர் ஜெகநாதனுக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு குப்பையை கொட்டிய நபரை கையும், களவுமாக பிடித்து விசாரணை நடத்தினார்.
அதில் அவர் நேதாஜி நகரை சேர்ந்த அன்பு என்பது தெரிய வந்தது. இதை அடுத்து அவருக்கு ரூபாய் 2000 அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும் போது : கோவையில் பொது இடங்களில் பொது பொதுமக்கள் குப்பை கொட்ட கூடாது. கோவை சுத்தமாக வைத்து இருக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனர்.
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
This website uses cookies.