பாலத்தின் தடுப்பு சுவற்றில் பைக் மோதி தூக்கி வீசப்பட்ட நபர் : வைரலாகும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
10 April 2023, 4:19 pm
Bridge - Updatenews360
Quick Share

கோவை நஞ்சுண்டாபுரம் மேம்பாலத்தில் அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியதில் பின்புறம் அமர்ந்திருந்த நபர் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
நஞ்சுண்டாபுரம் பாலத்தில் நேற்று சௌரிபாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் (வயது 51) மற்றும் ஓலம்பஸ் பகுதியைச் சேர்ந்த வினோத் (வயது 32) இருவரும் YAMAHA fz இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

இவர்கள் நஞ்சுண்டாபுரம் பாலத்தில் வேகமாக சென்றதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக பாலத்தின் தடுப்பு சுவற்றின் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இருசக்கர வானத்தில் பின்னால் அமர்ந்திருந்த சரவணகுமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போத்தனூர் போலிசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது தூக்கி வீசப்பட்ட பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 326

0

0