வேலூரில், மதுபோதையில் சாலையில் ரகளை செய்த காவலர், போலீஸ் ஸ்டேஷன் சிறையில் நிர்வாணமாக நின்றதால் பரபரப்பு நிலவியது.
வேலூர்: வேலூர் அடுத்த காட்பாடியில் இருந்து குடியாத்தம் நோக்கி தனியார் ஷூ கம்பெனியின் வாகனம் ஒன்று, நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது, பி.கே.புரம் அருகே வாகனம் சென்றபோது, இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் வாகனத்தை வழிமறித்தது மட்டுமல்லாமல், தகராறிலும் ஈடுபட்டுள்ளார்.
பின்னர், அந்த வாகனம் கே.வி.குப்பம் காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, தகராறில் ஈடுபட்ட அந்த நபர் தன்னை காவலர் எனக்கூறி, வேன் ஓட்டுநரிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். பின்னர், இதுதொடர்பாக கே.வி.குப்பம் காவல் நிலைய ஆய்வாளர் தமிழ்செல்வன் விசாரணை நடத்தியுள்ளார்.
இதில், ரகளையில் ஈடுபட்டவர், காட்பாடி விருதம்பட்டு காவல் நிலைய காவலர் அருண் கண்மணி (40) என்பது தெரிய வந்துள்ளது. பின்னர், மதுபோதையில் இருந்த அவரை, மருத்துவப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கே.வி.குப்பம் போலீசார் அன்று இரவே அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால், அங்கும் ரகளையில் ஈடுபட்ட காவலர் அருண் கண்மணி, அங்கிருந்த கதவின் கண்ணாடியை நொறுக்கியது மட்டுமல்லாமல், பணியில் இருந்த மருத்துவரையும் மிரட்டியுள்ளார். இதனையடுத்த், இதுதொடர்பாக குடியாத்தம் நகர காவல் நிலையம் மற்றும் கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் இருவேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: தொடர் வீழ்ச்சி காணும் தங்கம்.. இன்றைய நிலவரம் என்ன?
மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அருண் கண்மணி, வேலூர் மத்திய சிறையில் நேற்று இரவு அடைக்கப்பட்டார். அதோடு, அவரை சஸ்பெண்ட் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், காவலர் அருண் கண்மணி, ஏற்கெனவே குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் பணியாற்றியபோது, பானிபூரி கடைக்காரரை தாக்கிய வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் ஆவார். அது மட்டுமல்லாமல், கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் மது போதையில் ஆடைகளைக் கழற்றி நிர்வாணமாக நின்றதால், பெண் போலீசார் முகச்சுழிப்பு அடைந்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.