தமிழகம்

பெண்களை செல்போனில் போட்டோ எடுத்த காவலர்.. அதிரடி பணியிடை நீக்கம் செய்த ஆணையர்!

பெண்களை செல்போனில் புகைப்படம் எடுத்த காவலரை பணியிடை நீக்கம் செய்து கோவை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

கோயம்புத்தூர்: கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் பாலமுருகன். இவர் சாய்பாபா காலனியில் உள்ள ஒரு பேக்கரிக்கு சமீபத்தில் டீ குடிக்கச் சென்றுள்ளார். அப்போது அவர், அங்கு டீ குடித்துக் கொண்டிருந்த பெண்களை தனது செல்போனில் புகைப்படம் எடுத்ததாகத் தெரிகிறது. எனவே, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இது குறித்து அவரிடம் கேட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன், அங்கு இருந்தவர்களை தள்ளிவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். இதனையடுத்து உடனே அக்கம், பக்கத்தினர் விரைந்து சென்று பாலமுருகனை பிடித்து, சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து, காவலர் பாலமுருகனின் செல்போனை போலீசார் ஆய்வு செய்த போது, பெண்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இதையும் படிங்க : விவசாயிகளால் விஜய்க்கு சிக்கல்? தவெக மாநாட்டிற்கு ரூல்ஸ்!

இந்நிலையில், பாலமுருகனிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி, அதனை அறிக்கையாக காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணனிடம் சமர்பித்தனர். இந்த அறிக்கையின் அடிப்படையில், காவலர் பாலமுருகனை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு காவல் அதிகாரி ஒருவர் தவறாக நடந்து மாட்டிக்கொண்ட நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hariharasudhan R

Recent Posts

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

39 minutes ago

பார்த்தாலே தெரியுது, படம் ஃபிளாப்னு- பிரபாஸின் புது பட டீசரால் கடுப்பான ரசிகர்கள்…

பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…

3 hours ago

அதிமுக மூத்த தலைவருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு… செல்லூர் ராஜு சொன்ன விளக்கம்!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…

3 hours ago

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. டுவிஸ்ட் வைத்த பாஜக!

மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…

3 hours ago

வடசென்னை 2 டிராப்? வெளிப்படையாக போட்டுடைத்த வெற்றிமாறன்!

மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…

3 hours ago

ஜெகன்மூர்த்தி வீட்டுக்கு சென்ற பொற்கொடி ஆம்ஸ்டிராங்.. மனைவியை சந்தித்து ஆதரவு..!

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…

4 hours ago

This website uses cookies.