வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டத்தில் நின்றிருந்த ரயிலில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி.. மதுரைக்கு பறந்த ஹெலிகாப்டர்!!
திருச்செந்தூரிலிருந்து சென்னை எழும்பூர் வரும் ‘சென்னை – திருச்செந்தூர் விரைவு ரயில்’, நேற்று முன்தினம் இரவு திருச்செந்தூரிலிருந்து திட்டமிட்டபடி புறப்பட்டிருக்கிறது.
ஆனால் ரயில் லோகோ பைலட்டால் தண்டவாளத்தை சரியாக பார்க்க முடியவில்லை. எனவே ரயிலை ஸ்ரீவைகுண்டத்திலேயே நிறுத்தியிருக்கிறார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.
ஏனெனில் ஸ்ரீவைகுண்டத்திற்கு அடுத்து உள்ள தாதன்குளத்தில், வெள்ளம் காரணமாக ரயில் தண்டவாளத்தின் அடி பாகம் முழுவதும் அரித்து சென்றிருக்கிறது. கொஞ்சம் மிஸ்ஸாகியிருந்தாலும், ரயில் பெரும் விபத்திற்கு உள்ளாகியிருக்கும்.
இந்த ரயிலில் 700க்கும் அதிகமானோர் சிக்கியிருந்த நிலையில் முதற்கட்டமாக 100 பேர் வரை மீட்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், அதன் பின்னர் ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலைகள் மழை வெள்ளத்தால் மூழ்கியதால் மீட்பு படையினரால், மேற்கொண்டு முன்னேர முடியவில்லை.
இந்நிலையில், ஹெலிகாப்டர் மூலம் நேற்று அவர்களுக்கு உணவு விநியோகிக்கப்பட்டது. இந்த பயணிகளில் ஒரு நிறை மாத கர்ப்பிணி இருந்திருக்கிறார். அவருக்கு பிரசவலி ஏற்பட்டதையடுத்து இன்று ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு, மதுரைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார்.
தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், நலமாக இருப்பதாகவும் அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். மீட்பு படையினரின் உடனடி உதவியால் பயணிகள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.