ஓடும் ரயிலில் இருந்து தப்பியோடிய கைதி.. போலீசாரை தள்ளிவிட்டு ESCAPE ஆனதால் பரபரப்பு!!
கர்நாடகா போலீசார் திருவனந்தபுரம் இலவட்டம் பகுதியை சேர்ந்த அன்சாரி (38) என்பவரை கஞ்சா வழக்கில் கைது செய்தனர்.
பின்னர் அவரை கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.பின்னர் அவரை கடந்த 2 ம் தேதி போலீசார் திருவனந்தபுரம் 2 வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
அங்கு ஆஜர்படுத்தி விட்டு மீண்டும் சிறையில் அடைப்பதற்காக போலீசார் பாதுகாப்புடன் கொச்சுவேலி – பெங்களூர் ரயிலில் B1 கோச்சில் பயணம் செய்து கொண்டு இருந்தனர்.
நேற்று நள்ளிரவு 12.50 மணியளவில் ரயிலானது பாலக்காடு – போத்தனூர் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டு இருந்தது
அப்போது ரயில் மெதுவாக சென்று இருந்த நேரத்தில் கைதி போலீசாரை ரயிலுக்குள் தள்ளிவிட்டு ரயிலில் இருந்து குதித்து தப்பி ஓடினார்.
இது குறித்து கர்நாடக ஆயுதப்படை போலீசார் போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து சம்பவம் நடந்த பகுதியில் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் இது குறித்து போத்தனூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கஞ்சா வழக்கு கைதியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.