தின்பண்டத்திற்காக சேமித்து வைத்த பணத்தை வயநாடு நிலச்சரிவிற்கு பள்ளி மாணவி வழங்கி உள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவி்ன் காரணமாக 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏராளமானோர் உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்.
அந்த வகையில் மதுரை திருநகரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முத்துப்பாண்டி – கார்த்திகா தம்பதியினரின் மகளான ஶ்ரீ ஜோதிகா என்பவர் தனியார் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், மாணவி ஶ்ரீ ஜோதிகா தின்பண்டத்திற்காக தனது உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை வயநாடு நிலச்சரிவில் பாதிக்கபட்ட மக்களுக்காக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் வழங்கினார்.
இதுதொடர்பாக மாணவி ஶ்ரீஜோதிகா கூறுகையில்,” தொலைக்காட்சியின் வாயிலாக வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்கும் பொழுது மிகவும் வேதனையாக இருந்தது. தின்பண்டத்திற்காக சேமித்து வைத்த பணத்தை மாவட்ட ஆட்சியர் மூலமாக அவர்களுக்கு வழங்க வேண்டும் என வந்துள்ளேன்” என்றார்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.