ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தில், பொதுமக்களிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறிய கவர்ச்சிகரமான விளம்பரங்களை கூறி மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் தமிழகம் முழுவதும் 26 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
மேலும், இந்த விவகாரத்தில், பாஜக விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக உள்ள ஹரிஸ், அந்த நிறுவனத்தின் மற்றொரு இயக்குனரான மாலதி உள்ளிட்ட சிலரை கைது செய்தனர். மேலும், ஆருத்ரா நிதி நிறுவன வசதி வழக்கில் நடிகர் ஆர் கே சுரேஷ் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 12ம் தேதி இந்த மோசடி வழக்கில், பாஜக பிரமுகர் அலெக்ஸ் விசாரணைக்காக சென்னையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். முன்னதாக, பாஜக வழக்கறிஞர் பிரிவு அலெக்ஸ் மற்றும் சுந்தர் ஆகிய இரண்டு பேர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அலெக்ஸ் மட்டுமே ஆஜராகியுள்ளார்.
அந்த வகையில், ஆருத்ரா நிதி நிறுவன இயக்குனர்களில் ஒருவரான ஹரிஷ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாஜக வழக்கறிஞர் பிரிவு அலெக்ஸிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
தற்போது, ஆருத்ரா கோல்ட் நிறுவன மோசடி வழக்கில் காஞ்சிபுரம் கிளையில் இயக்குநராக உள்ள ராஜா செந்தாமரை என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரத்தில், 200க்கும் மேற்பட்டோரிடம் சுமார் 1600 கோடி ரூபாய் முதலீடாக பெற்றது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.