Categories: தமிழகம்

பைக்கில் சென்றவர்களை துரத்திய ஒற்றை யானை.. பயந்து ஓடிய பெண் யானையிடம் சிக்கி பரிதாப பலி : உடலை வாங்க மறுத்து மறியல்!

பைக்கில் சென்றவர்களை துரத்திய ஒற்றை யானை.. பயந்து ஓடிய பெண் யானையிடம் சிக்கி பரிதாப பலி : உடலை வாங்க மறுத்து மறியல்!

ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் தஞ்சம் அடைந்து 18 யானை கூட்டங்களை கடந்த வாரம் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டப்பட்டது. இந்நிலையில் ஒற்றை யானை மட்டும் வனப் பகுதிகளில் சுற்றித்திரிந்து கொண்டு இரவு நேரங்களில் வெளியேறி அருகே உள்ள விவசாயிகளின் விளைப் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது,

இன்று அதிகாலை அந்த ஒற்றை காட்டு யானை அனுமந்தபுரம் பகுதியில் சுற்றி திரிந்தது. அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த முனிரத்தினா என்ற இவர் கெலமங்கலம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலைக்காக சென்ற போது வழியில் சென்ற இருசக்கர வாகன ஓட்டியிடம் அவசரமாக வேலைக்கு செல்ல வேண்டும் எனக் கூறி உதவி கேட்டு வாகனத்தில் ஏறிச் சென்றுள்ளார் .

அப்போது எதிரே வந்த ஒற்றை காட்டு யானை துரத்தி தாக்கியதில் பெண் மட்டும் பலியானார் .இருசக்கர வாகனம் ஓட்டிசென்ற நபர் வாகனத்தை விட்டு தப்பிச் சென்று உயிர் பிழைத்தார்.

தகவல் அறிந்த கிராம மக்கள் பெண்ணின் உடலை வைத்துக் கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர் .இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த உத்தனப்பள்ளி போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனாலும் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் வரவேண்டும் என உடலை வைத்துக் கொண்டு மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒற்றை யானையும் சிறிது நேரம் அப் பகுதியிலேயே சுற்றி திரிந்தது அதனை அப்பகுதி மக்கள் வனப்பகுதிக்கு விரட்டினர். சாலை மறியல் காரணமாக உத்தனப்பள்ளி கெலமங்கலம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மேலும் சம்பவ இடத்திற்கு வந்த ஓசூர் காவல் துணை கண்காணிப்பாளர் பாபு பிரசாந்த் மற்றும் சூளகிரி தாசில்தார் சக்திவேல், வனச்சரக அலுவலர் பார்த்தசாரதி ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்ட பின்னர். இறந்த பெண்ணின் உடலை எடுக்க அனுமதித்தனர்.

இந்த நிலையில் அதிகாலை நேரத்தில் உத்தனப்பள்ளி – கெலமங்கலம் சாலையில் ஒற்றை காட்டு யானை பெண்ணை துரத்தி தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

14 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

16 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

16 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

17 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

17 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

18 hours ago

This website uses cookies.