விழுப்புரம் அருகே சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட விழாவில் திடீரென கூட்டத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக முழுவதும் அனைத்து கிராமங்களிலும் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் அருகே உள்ள ஆனாங்கூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், புகழேந்தி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ரூபாய் ஒரு கோடியே 33 லட்சம் மதிப்பிலான மத்திய மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் மத்திய அரசு திட்டங்கள் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் முத்துரா வங்கி கடன் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுக்களும் பெறப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், மக்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் மருத்துவம் கல்வி ஆகியவற்றில் பூர்த்தி செய்யும் வகையில் இல்லம் தேடி கல்வி இல்லம் தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் மோகன் பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்திற்கு நடுவே பாம்பு புகுந்ததால் அமர்ந்திருந்த பெண்கள் அலறியடித்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர். பின்னர் அங்கிருந்த இளைஞர்கள் பாலிதீன் பையை கையில் மாட்டிக் கொண்டு பாம்பை லாவகமாக பிடித்து எடுத்துச் சென்றனர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.