விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவானூர் ஊராட்சியில், இன்று 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ், ரூ.18.00 இலட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பகுதி நேர நியாய விலைக்கடை மற்றும் சிறுவானூர் மெயின்ரோடு முதல் குடியிருப்பு பகுதி வரை ரூ.4.51 இலட்சம் மதிப்பீட்டில் மின்கம்பங்களுடன் கூடிய தெருவிளக்கு வசதி ஆகியவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்.
அப்பொழுது கூட்டத்தில் திடீரென பொதுமக்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு பாம்பு வந்ததால் அங்கு பொதுமக்கள் அலறி அடித்து நகர்ந்தனர். இதனால் கூட்டத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர் அமைச்சர் பொன்முடி பொதுமக்களை பார்த்து பேச தொடங்கினார். அப்போது பாம்பை படம் பிடிப்பதற்காக நின்றிருந்த செய்தியாளர்களை அங்கிருந்து நகருமாறு கூறி பேசத் தொடங்கினர். தண்ணீர் தொட்டி திறப்பு நிகழ்ச்சிக்கு அழையா விருந்தாளியாக வந்த தண்ணீர் பாம்பால் பரபரப்பு நிலவியது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.