சபரிமலைக்கு சென்ற பக்தரின் இருமுடி பையில் பாம்பு : ஷாக் ஆன தமிழக பக்தர்.. பதற வைத்த காட்சி!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது ஓணம் பண்டிகைக்காக கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் தற்போது சபரிமலையில் குவிந்துள்ள நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் மலையேறி வந்ததன் காரணமாக உடல் அசதியால் 18 படி அருகே உள்ள மரத்தின் அருகே ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் வைத்திருந்த இருமுடி அசைவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் 18 படி அருகே தனது இரு முடியை கீழே வைத்தார்.
அப்போது இருமுடியில் உள்ளே பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில் அங்கிருந்த சிறப்பு காவல் படையினர் விரைந்து வந்து இரு முடியை பார்த்தபோது அதில் பாம்பு ஒன்று இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அந்தப் பகுதியில் இருந்து தப்பி ஓட முயன்ற பாம்பை தனது கையால் பிடித்து அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து பின்னர் அதனை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டார்.
பக்தர்கள் அதிகம் கூடும் சபரிமலை ஐயப்பன் கோவில் பதினெட்டாம்படி அருகே பாம்பு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.