Categories: தமிழகம்

நூலகத்தில் படையெடுக்கும் பாம்பு, பூரான்கள் : புதர் மண்டி கிடக்கும் அவலம்… அச்சத்துடன் வரும் வாசகர்கள்!!

சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டியில் செயல்பட்டு வரும் கிளை நூலகம் அருகே அதிகளவில் புதர்மண்டி கிடப்பதால் பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அடிக்கடி நூலகத்திற்குள் நுழைந்து வருவது வாசகர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி பேருந்து நிலையம் பின்புறம் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்திற்கு புஞ்சைபுளியம்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள சுமார் நூற்றுக்கு மேற்பட்ட வாசகர்கள் தினந்தோறும் வந்து செல்வது வழக்கம்.

இந்த கிளை நூலகம் அருகே பட்டு வளர்ச்சி துறைக்கு சொந்தமான கட்டிடம் கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் இருப்பதால் கட்டிடத்தைச் சுற்றி அதிக அளவில் புதர் மண்டி கிடைக்கிறது.

இதனால் நூலகத்திற்குள் அடிக்கடி பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் உள்ளே நுழைந்து விடுவதால் தாங்கள் அச்சத்துடனே படிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக வாசகர்கள் வேதனை தெரிகின்றனர்.

மேலும் பேருந்தில் வெளியூருக்கு பயணம் செய்ய வரும் பயணிகள் சிலர் நூலகத்தின் நுழைவாயில் அருகாமையில் அமர்ந்து மது அருந்தி விட்டு மது பாட்டில்களை அங்கேயே விட்டு செல்வதாகவும் சிலர் நுழைவாயிலேயே சிறுநீர் கழித்து செல்வதால் அதிக அளவில் துர்நாற்றம் வீசுவதாகவும் வாசகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே நகராட்சி நிர்வாகத்தினர் இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விஷ ஜந்துக்கள் வராமல் தடுக்க புதர் மண்டி கிடைக்கும் இடங்களை சுத்தம் செய்து தர வேண்டும் எனவும் வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.