சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டியில் செயல்பட்டு வரும் கிளை நூலகம் அருகே அதிகளவில் புதர்மண்டி கிடப்பதால் பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அடிக்கடி நூலகத்திற்குள் நுழைந்து வருவது வாசகர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி பேருந்து நிலையம் பின்புறம் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்திற்கு புஞ்சைபுளியம்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள சுமார் நூற்றுக்கு மேற்பட்ட வாசகர்கள் தினந்தோறும் வந்து செல்வது வழக்கம்.
இந்த கிளை நூலகம் அருகே பட்டு வளர்ச்சி துறைக்கு சொந்தமான கட்டிடம் கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் இருப்பதால் கட்டிடத்தைச் சுற்றி அதிக அளவில் புதர் மண்டி கிடைக்கிறது.
இதனால் நூலகத்திற்குள் அடிக்கடி பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் உள்ளே நுழைந்து விடுவதால் தாங்கள் அச்சத்துடனே படிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக வாசகர்கள் வேதனை தெரிகின்றனர்.
மேலும் பேருந்தில் வெளியூருக்கு பயணம் செய்ய வரும் பயணிகள் சிலர் நூலகத்தின் நுழைவாயில் அருகாமையில் அமர்ந்து மது அருந்தி விட்டு மது பாட்டில்களை அங்கேயே விட்டு செல்வதாகவும் சிலர் நுழைவாயிலேயே சிறுநீர் கழித்து செல்வதால் அதிக அளவில் துர்நாற்றம் வீசுவதாகவும் வாசகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே நகராட்சி நிர்வாகத்தினர் இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விஷ ஜந்துக்கள் வராமல் தடுக்க புதர் மண்டி கிடைக்கும் இடங்களை சுத்தம் செய்து தர வேண்டும் எனவும் வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.