கல்லூரிக்கு பைக்கில் புறப்பட்ட மாணவன்.. ஆம்னி வேனை முந்த முயன்ற போது எதிரே வந்த பேருந்து : கோவையில் சோகம்!!
கோவை மாதம்பட்டி அம்மன்நகர் தெற்கு தோட்டத்தை சேர்ந்தவர் லோகநாதன் (20). இவர் பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் கல்லூரியில் வெள்ளிக்கிழமை ஆண்டு விழா நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்ள தனது இருசக்கர வாகனத்தில் சென்ற லோகநாதன், மதியம் வீட்டிற்கு வந்துள்ளார்.
பின்னர் மீண்டும் தனது இருசக்கர வாகனத்தில் கல்லூரி நோக்கிச் சென்றார். அப்போது மாதம்பட்டி பெட்ரோல் பங்க் அருகே வந்த போது முன்னாள் சென்ற ஆம்னி வேனை முந்த முயன்றாத தெரிகிறது.
அப்போது வேனில் மோதி கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்தில் மோதி லோகநாதன் பேருந்து சக்கரத்தில் சிக்கினார். இதில் லோகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த பேரூர் போலீசார் லோகநாதன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி ஆண்டு விழாவிற்கு சென்ற மாணவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.