Categories: தமிழகம்

நீட் தேர்வு பயிற்சி மையத்தின் 3வது மாடியில் இருந்து திடீரென குதித்த மாணவி : திருப்பூர் அருகே பரபரப்பு… போலீசார் விசாரணை!!

நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் பழைய பஸ் நிலையம், காமராஜர் சாலையில் நீட் தேர்வு மற்றும் போட்டி தேர்வு பயிற்சி மையம் இருக்கிறது. இந்த பயிற்சி மையமானது மூன்றாவது மாடியில் அமைந்திருக்கிறது.

இதில் 20க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பல்வேறு போட்டி தேர்வுகளுக்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இங்கு திருப்பூர் அடுத்த படியூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகள் ஆனந்தி (வயது 17) என்ற பயிற்சி பெற்று வருகிறார்.

இந்த மாணவி ஏற்கனவே ஒருவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று பயிற்சி வகுப்புக்கு வந்த மாணவியை காண அவரது காதலன் வந்துள்ளார்.

அதே சமயத்தில் பயிற்சி வகுப்பில் இருந்து மகளை அழைத்து செல்வதற்காக ஆனந்தியின் தந்தை மணிகண்டன் அங்கு வந்துள்ளார். அப்பொழுது இவர்களது காதல் விவகாரம் குறித்து அவருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து மகளை மணிகண்டன் கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த ஆனந்தி பயிற்சி வகுப்பு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக குதித்து இருக்கிறார். இதில் அவருக்கு இடுப்பு மற்றும் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு ஏராளமான ரத்தம் வீணானது. வலியில் அவரும் அலறி துடித்து இருக்கிறார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் அந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக திருப்பூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அபாய கட்டத்தை தாண்டிய ரெட்ரோ? என்னைய காப்பாத்திட்டீங்க-சூர்யா ஹேப்பி அண்ணாச்சி!

கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த வாரம் மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான “ரெட்ரோ”…

18 minutes ago

‘நீயா நானா’ கோபிநாத் விலகுவது உறுதி..? அதிகாரப்பூர்வமாக வெளியான அறிவிப்பு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை மக்கள் மத்தியில் கவர வைத்த பங்கு கோபிநாத், பிரியங்கா, மாகாபாவுக்கு உண்டு. நிகழ்ச்சியை கொண்டு…

48 minutes ago

தன் வாயால் தானே கெட்ட விஜய் தேவரகொண்டா! பாய்ந்தது வன்கொடுமை தடுப்புச் சட்டம்?

இந்தியர்களை அதிரவைத்த சம்பவம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னும் பல…

51 minutes ago

சென்னை புறப்பட்ட விஜய்.. பவுன்சர்களால் கொடைக்கானல் விவசாயிகள் அவதி.!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள தாண்டிகுடி கிராமத்தில் ஜனநாயக படப்பிடிப்புக்காக தமிழக வெற்றி கழக கட்சி தலைவரும் நடிகருமான விஜய்…

1 hour ago

டாப்ஸ்லிப் பகுதிக்கு டிரெக்கிங் சென்ற மருத்துவர்… சடலமாக திரும்பி வந்த சோகம்!

தமிழ்நாடு ட்ரெக்கிங் என்ற திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகள் தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…

2 hours ago

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

2 days ago

This website uses cookies.