சாலையில் சென்ற காரில் திடீரென தீ பிடித்ததால் சமயோஜிதமாக செய்லபட்ட 3 நபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி அடுத்துள்ள கெஸ்ட் லைன் என்ற இடத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ஹூண்டாய் காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த காரில் பெங்களூரு புறநகர் பகுதியான சந்தாபுரத்தை சேர்ந்த 3 நபர்கள் சந்தாபுரத்திலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மின் கசிவு காரணமாக காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காரில் இருந்த 3 பேரும் கீழே இறங்கி தப்பித்து ஓடி உள்ளனர்.
சாலையில் எரிந்து கொண்டிருந்த காரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைப்பார்த்த அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போக்குவரத்தை சரி செய்து எரிந்த காரை போலீசார் அப்புறப்படுத்தினர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.