சாலையில் சென்ற காரில் திடீரென தீ பிடித்ததால் சமயோஜிதமாக செய்லபட்ட 3 நபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி அடுத்துள்ள கெஸ்ட் லைன் என்ற இடத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ஹூண்டாய் காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த காரில் பெங்களூரு புறநகர் பகுதியான சந்தாபுரத்தை சேர்ந்த 3 நபர்கள் சந்தாபுரத்திலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மின் கசிவு காரணமாக காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காரில் இருந்த 3 பேரும் கீழே இறங்கி தப்பித்து ஓடி உள்ளனர்.
சாலையில் எரிந்து கொண்டிருந்த காரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைப்பார்த்த அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போக்குவரத்தை சரி செய்து எரிந்த காரை போலீசார் அப்புறப்படுத்தினர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.