கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இனிப்பு வகை தயாரிக்கும் குடோன் உள்ளது. அந்த இடத்தின் அருகில் அட்டைப்பெட்டிகள் அடுக்கி வைக்கப்படும் அறையும் உள்ளது.
இந்நிலையில் இன்று இரவு திடீரென அந்த அட்டைப்பெட்டி வைக்கப்பட்டிருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் கடும் புகை மூட்டம் நிலவியது.
தீ வேகமாக எரிவதை பார்த்த அந்நிறுவன ஊழியர்களும், பொதுமக்களும் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு இரண்டு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
மின்கசிவு காரணமாக அட்டைப்பெட்டி வைக்கப்பட்டிருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு உய்ப்பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு சிஆர்பிஎப்…
காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் ஆணித்தரமான கருத்துக்களை காமெடி மூலமாக கொண்டு…
கமல்ஹாசனா இப்படி செய்தது? தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் இன்னும் அவரது ரசிகர்களின் மனதில் உலக நாயகனாகவே…
பொதுவெளியில் பிரபலங்களுக்கு திடீரென சங்கடங்கள் ஏற்படுவது வழக்கம்தான். ஆனால் ஒரு சிலர் அணிந்து வரும் ஆடையும் அப்படி சங்கடத்தை ஏற்படுத்திவிடுகிறது.…
கிரிக்கெட் ஜாம்பவனாக வலம் வருவபர் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் ஒரு…
This website uses cookies.