குவைத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஏராளமானோர் தீயில் கருகி உயிரிழந்ததாக கிடைத்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக வந்துள்ள தகவல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பணன் ராமு என்பவர் பல ஆண்டுகளாக குவைத்தில் தங்கி சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்து கட்டிடத்தில் இவரும் தங்கி இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அவர் தீ விபத்தில் ஏற்பட்ட மூச்சுத் திணறலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் அங்கிருந்து தகவல்கள் வந்துள்ளன.
அவர் உயிரிழந்ததாக அவருடன் பணியாற்றக்கூடிய உறவினர்கள் தகவல் தெரிவித்ததன் பெயரில் உறுதி செய்ய பட்டுள்ளது. இந்த தகவல்களால் ராமநாதபுரத்தில் உள்ள அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது மனைவி குருவம்மாள் மகன் சரவணக்குமார் ஆகியோர் கதறி அழுதது சோகம் அடைந்துள்ளனர்.
இந்திய வெளியுறவுத்துறை உடனடியாக விசாரணை நடத்தி அவர் இறந்திருந்தால் அவரது உடலை தமிழகம் கொண்டு வரவும் உரிய இழப்பீடு பெற்று தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கருப்பணன் ராமு ஒருவிதமான 26 ஆண்டுகளாக குவைத் நாட்டில் பணிபுரிந்து வந்ததாகவும், விஷாவை முடித்துவிட்டு இன்னும் ஒரு வாரத்தில் சொந்த ஊரான ராமநாதபுரம் வர இருந்தது தற்போது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவர் உயிரிழந்தது அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதே போல கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் முட்டத்தைச் சேர்ந்த சின்னதுரை என்பவர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
வெளியான டிரெயிலர் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தை…
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
This website uses cookies.