கோவை புலியகுளம் பகுதியில் அறை எடுத்து தங்கி தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவர் நாசிப். இவருடன் 5 நண்பர்களும் தங்கி உள்ளனர்.
இந்நிலையில் நேற்று அங்கு வந்த மூன்று மர்ம நபர்கள் நாசிப் அறையின் கதவைத் தட்டி உள்ளனர். அறையை திறந்த பின் உள்ளே நுழைந்த மூவரில், ஒருவர் நாசிப்பின் கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு மிரட்டி அங்கிருந்த 2,85,000 மதிப்புள்ள 5 விலை உயர்ந்த மொபைல் போன்கள் மற்றும் 500 பணத்தை எடுத்துக்கொண்டு, நாசிப் தாக்கி விட்டு அறையையும் மூடிவிட்டு சென்றுள்ளனர்.
பின்னர் அறையில் இருந்த மாணவர்கள் வெளியேறி இச்சம்பவம் குறித்து இராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை கொண்டு ஆய்வு செய்தும் மொபைல் ட்ராக்கிங் தொழில் வசதியைக் கொண்டும் மூன்று பேரில் ஒருவரை தற்போது பிடித்துள்ளனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிடிபட்ட நபர் சிங்காநல்லூர் பகுதியில் சேர்ந்த ஜெயராஜ்(23) என்பது தெரிய வந்தது.மேலும் அவர் தான் இச்செயலுக்கு மூளையாக செயல்பட்டதும் தெரிய வந்தது.
பின்னர் அவரிடமிருந்து 95,000 மதிப்புள்ள மூன்று மொபைல் போன்கள் மற்றும் ஒரு கத்தியையும் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மீதமுள்ள இருவரை போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.