Categories: தமிழகம்

அவனை விட்றாதீங்க.. உடை முழுக்க ரத்தக்கறை; சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர்..!

திருச்சி தென்னூரை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது மகள் இறந்து விட்ட நிலையில் 10வயது பேத்தியை தனது பராமரிப்பில் வளர்த்து வருகிறார். சிறுமி தென்னூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பயின்று வருகிறார்.

நேற்று முன்தினம் சிறுமி தாத்தாவிடம் வெளியே சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் இது குறித்து அந்த முதியவர் தில்லை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் காவல்துறையின சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று தென்னூர் வாமடம் சாலையில் அந்த சிறுமி நடந்து வந்து கொண்டிருந்துள்ளார்.
அதனைப் பார்த்த ஒருவர் அவரை மீட்டு தாத்தாவிடம் ஒப்படைத்தார்.

சிறுமி உடையில் ரத்த கரை இருந்ததை பார்த்த அவர் சிறுமியின் தாத்தா தில்லை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தில்லைநகர் காவல்துறையினர் அந்த சிறுமியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த சிறுமியை ஒரு நபர் தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. இது குறித்து மாநகர காவல்துறை ஆணையர் காமினி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில் தீவிர விசாரணை காவல்துறையினர் ஈடுபட்டனர்.

அப்பகுதியில் இருக்கும் பல்வேறு சிசி டிவி காட்சிகளை கொண்டு விசாரணையும் மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் திருச்சி உய்யக்கொண்டான் திருமலையை சேர்ந்த சின்னராஜா(25) என்பது தெரிய வந்தது. பின்னர் காவல்துறையினர் அந்த நபரின் செல்போன் சிக்னலை ஆராய்ந்த போது அவர் சிதம்பரத்தில் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது.

தொடர்ந்து சிதம்பரத்தில் தலைமறைவாக இருந்த சின்ன ராஜாவை காவல்துறையினர் கைது செய்து திருச்சிக்கு இன்று அழைத்து வந்தனர். அப்பொழுது அவர் காவல்துறையிடம் இருந்து தப்ப முயன்ற பொழுது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது . உடனடியாக அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சின்ன ராஜா மீது காவல்துறையினர் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Poorni

Recent Posts

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

14 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

16 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

16 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

17 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

18 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

18 hours ago

This website uses cookies.