செங்கல் சூளை பகுதியில் பிடிபட்ட 10 அடி பைத்தான் மலை பாம்பு – பாம்பு பிடி வீரர் பிடித்து மாங்கரை வனத்தில் விடப்பட்டது.
கோவை தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் செங்கல் சூளைக்கு அருகே, பத்து அடி மதிக்கத்தக்க மலைப் பாம்பு ஒன்று வந்து இருக்கிறது. இதனை அப்பகுதியில் இருந்த சிலர் பார்த்தவுடன் பயந்து இருக்கின்றனர்.
பைத்தான் மலை பாம்பு அந்தப் பகுதியில் உள்ள புதர் ஒன்றுக்குள் சுருண்டு கொண்டது. உடனடியாக வனத்துறைக்கும் பாம்பு பிடி வீரருக்கும் அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் அலைபேசியில் தகவல் தந்தனர். இந்த நிலையிலே வனத்துறை வன பணியாளர்களும் வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்ந்த பாம்பு பிடி வீரரான விக்னேஷ் குமாரும் நஞ்சுண்டாபுரம் அங்கு சென்றனர்.
அப்பொழுது, அங்கு இருந்த மலைப் பாம்புவை வனத் துறையுடன் இணைந்து பாம்பு பிடி உபகரணங்கள் உதவியுடன பாம்பு பிடி வீரர் விக்னேஷ் குமார் மீட்டு பைக்குள் அடைத்தார். அடைக்கப்பட்ட பாம்பு பின்னர் மாங்கரை வனப்பகுதியில் விடுவிக்கின்றனர். பொதுமக்கள் தாங்கள் வசிக்கக் கூடிய பகுதிகளில், புதர்
மண்டி கிடக்காமல் பார்த்துக் கொள்வது அவசியமாக இருக்கின்றது.
தற்பொழுது கோடை மழை பொழிந்த நிலையில் பல்வேறு இடங்களிலும் புதர்கள் காணப்படுகின்றன.இனி வரக் கூடிய காலங்களிலும் மழை அதிக அளவில் பொழியும் என்பதனால், செடிகள் புதர்கள் வளர ஆரம்பிக்கும் நிலை ஏற்பட்டு இருக்கின்றன. இந்த நிலையிலே, புதர் பகுதிகளில் பாம்புகள் முகாமிடும் என்பதனால், பொதுமக்கள் தங்களை சுற்றி உள்ள பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் உயிரியல் ஆர்வலர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.
பொதுவாக மலைப் பாம்பு வனத்தில் இருக்கும் நிலையில், வனத்தை ஒட்டிய பகுதிகளில் அவ்வளவு எளிதாக பொதுமக்களுக்கு தென்படாது. ஆனால் செங்கல் சூளை அருகே பைதான் மலை பாம்பு வந்தது அப்பகுதி மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தினாலும், அதனை லாபகமாக பிடித்து வனத்தில் விடப்பட்ட நிலையில் பொதுமக்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
This website uses cookies.