நீலகிரி மாவட்டம் தேவாலா அடுத்த பெருங்கரை உப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகேஷ். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. கடந்த 2009-ம் ஆண்டு தமிழ்ச்செல்வி தற்கொலை செய்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து தமிழ்ச்செல்வியை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் நாகேஷ் மீது இந்திய தண்டனைச் சட்டம் 306 என்ற சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இதன் பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு வழக்கு விசாரணையின் போது ஜாமின் வழங்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகளிர் கோர்ட்டில் நடந்து வரும் நிலையில் சாட்சிகள் விசாரணை முடிந்து இறுதி கட்டத்தில் உள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான அப்போதைய தேவாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்காமல் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக இருந்துள்ளார்.
கிருஷ்ணசாமி தற்போது திருப்பூர் சைபர் கிரைம் பிரிவில் போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வரும் நிலையில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு இதுவரை 7 முறை சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
ஆனால் அவர் இதுவரை கோர்ட்டில் ஆஜராகவில்லை. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணசாமி ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மகிளா கோர்ட்டு நீதிபதி ஸ்ரீதரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
This website uses cookies.