Categories: தமிழகம்

பெண் தீக்குளித்து தற்கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பம் : திருப்பூர் ஏடிஎஸ்பிக்கு கோர்ட் போட்ட உத்தரவு!!!

நீலகிரி மாவட்டம் தேவாலா அடுத்த பெருங்கரை உப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகேஷ். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. கடந்த 2009-ம் ஆண்டு தமிழ்ச்செல்வி தற்கொலை செய்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து தமிழ்ச்செல்வியை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் நாகேஷ் மீது இந்திய தண்டனைச் சட்டம் 306 என்ற சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இதன் பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு வழக்கு விசாரணையின் போது ஜாமின் வழங்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகளிர் கோர்ட்டில் நடந்து வரும் நிலையில் சாட்சிகள் விசாரணை முடிந்து இறுதி கட்டத்தில் உள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான அப்போதைய தேவாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்காமல் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக இருந்துள்ளார்.
கிருஷ்ணசாமி தற்போது திருப்பூர் சைபர் கிரைம் பிரிவில் போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வரும் நிலையில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு இதுவரை 7 முறை சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

ஆனால் அவர் இதுவரை கோர்ட்டில் ஆஜராகவில்லை. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணசாமி ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மகிளா கோர்ட்டு நீதிபதி ஸ்ரீதரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

10 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

11 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

12 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

12 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

13 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

14 hours ago

This website uses cookies.