அவதூறு வழக்கில் திருப்பம்… நேரில் ஆஜரான சி.வி.சண்முகம் : நீதிமன்றம் போட்ட பரபரப்பு உத்தரவு!
தமிழக அரசை அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது போடப்பட்ட நான்கு வழக்குகளில் இரண்டு வழக்குகளை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மேலும் இரண்டு அவதூறு வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் கடந்த 20. 7. 2023 அன்று விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் தமிழக அரசையும் தமிழக முதல்வரையும் அவதூறாக பேசியதாக அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியன் விழுப்புரம் முதன்மை நீதிமன்றத்தில் புதிய வழக்கை தொடுத்தார்.
இதனை அடுத்து தொடரப்பட்ட புதிய வழக்கில் சம்மன் கிடைக்கப்பெற்று இன்று விழுப்புரம் முதன்மை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் ஆஜர் ஆனார்.
வழக்கை விசாரித்த நீதிபதியிடம் அமைச்சரின் வழக்கறிஞர் ராதிகா செந்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் வழக்கை மூன்று மாதங்கள் தள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதற்கு நீதிபதி பூர்ணிமா உங்களது வக்காலத்தை 19ஆம் தேதி முன்வைக்குமாறு உத்தரவிட்டார். இதனை அடுத்து இவ்வழக்கு வரும் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.