ஈரோடு : சத்தியமங்கலம் அருகே அரசு பேருந்தை வழிமறித்து பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்த ஒற்றைக் காட்டு யானையால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது விட்டு வெளியேறி சாலையோரம் உலா வருவதும், சாலையை கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன.
இந்நிலையில் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஆசனூர் கொள்ளேகால் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை வழிமறித்து நின்றது.
பின்னர் சிறிது நேரம் கழித்து பேருந்தை நோக்கி வந்த காட்டு யானை பேருந்தின் முன் பக்க கண்ணாடியை தனது தும்பிக்கையால் அடித்து உடைத்தது.
இதனைக் கண்டு அச்சமடைந்த பேருந்து உள்ளே இருந்த பயணிகள் அச்சுத்துடன் சத்தம் எழுப்பியதால் யானை பின்னோக்கி சென்றது.
https://vimeo.com/788554596
இதனால் ஆசனூர் கொள்ளேகால் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதன் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.