ஈரோடு : சத்தியமங்கலம் அருகே அரசு பேருந்தை வழிமறித்து பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்த ஒற்றைக் காட்டு யானையால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது விட்டு வெளியேறி சாலையோரம் உலா வருவதும், சாலையை கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன.
இந்நிலையில் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஆசனூர் கொள்ளேகால் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை வழிமறித்து நின்றது.
பின்னர் சிறிது நேரம் கழித்து பேருந்தை நோக்கி வந்த காட்டு யானை பேருந்தின் முன் பக்க கண்ணாடியை தனது தும்பிக்கையால் அடித்து உடைத்தது.
இதனைக் கண்டு அச்சமடைந்த பேருந்து உள்ளே இருந்த பயணிகள் அச்சுத்துடன் சத்தம் எழுப்பியதால் யானை பின்னோக்கி சென்றது.
https://vimeo.com/788554596
இதனால் ஆசனூர் கொள்ளேகால் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதன் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.