தமிழகம்

பீரோவுக்கு அடியில் கிடந்த கட்டப்பை.. ரத்தப்போக்குடன் கிடந்த மகள்.. அடுத்து நடந்த திருப்பம்!

சேலத்தில் தனக்குத்தானே பிரசவம் பார்த்த பெண் அதிக ரத்தப்போக்குடன் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம்: சேலம் மாவட்டம், வாய்க்கால்பட்டறையில் தமிழ்ச்செல்வன் – ஜோதி தம்பதி வசித்து வந்தனர். இதில், தமிழ்ச்செல்வன் தச்சு வேலை செய்து வந்தார். மேலும், இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ள நிலையில், 4வது முறையாக ஜோதி கர்ப்பம் தரித்துள்ளார்.இதனையடுத்து, சமீபத்தில் ஜோதி அவரது தாய் வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், 7 மாதமான பிறகுதான் ஜோதி தாய்மை அடைந்திருந்தது, அவரது கணவருக்கு தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஜோதியின் பெற்றோருக்கு, தனது மகள் கருவுற்றிருக்கிறாள் என்பது தெரியாமலே இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், வீட்டில் இருந்த ஜோதிக்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது.

இதனையடுத்து, அவர் தனக்குத்தானே பிரசவம் பார்த்ததாகத் தெரிகிறது. இதில் பிறந்த பெண் குழந்தை இறந்த நிலையில், அதனை வீட்டின் பீரோவுக்கு அடியில் மறைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர், ரத்த வெள்ளத்தில் ஜோதி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அப்போதுதான், தனது மகளுக்கு பிரசவத்தின்போது ஏற்பட்ட ரத்தப்போக்கு என்பதை அவர்கள் அறிந்துள்ளனர். இதனையடுத்து, குழந்தை எங்கே என்று தேடிப் பார்த்த போது, பீரோவிற்கு அடியில் மறைத்து வைத்திருந்ததைப் பார்த்துள்ளனர்.

இதையும் படிங்க: அது எனக்கு கெளரவம்.. பாலையா சர்ச்சை நடனம் குறித்து ஊர்வசி ரவுத்தெலா விளக்கம்!

பின்னர், வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக பெண்ணின் உடல் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இது குறித்து ஆற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

13 hours ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

13 hours ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

14 hours ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

14 hours ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

14 hours ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

15 hours ago

This website uses cookies.