தமிழகம்

தமிழ்நாட்டுச் சடங்கே வேண்டாம்.. கலங்க வைக்கும் ஆடியோ.. குமரியில் அதிர்ச்சி சம்பவம்!

கன்னியாகுமரியில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்ததில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.

கன்னியாகுமரி: குமரி மாவட்டம், சுசீந்திரம் தெற்கு மண் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (25). இவர் கொட்டாரம் பகுதியில் மின்வாரிய அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கோவை மாவட்டம், கோவில் பாளையத்தைச் சேர்ந்த மின்வாரிய மேற்பார்வையாளர் பாபு என்பவரின் மகள் சுருதி பாபு (24) என்பவர் உடன், கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி இருவீட்டார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த திருமணத்தின் போது, 45 சவரன் தங்க நகைகள், 5 லட்சம் ரொக்கப் பணம், வெள்ளிப் பாத்திரங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவை வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர், தம்பதி சுசீந்திரத்தில் உள்ள கார்த்திக் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் உடன் சுருதி பாபுவின் மாமியார் செண்பகவள்ளியும் வசித்து வந்துள்ளார். இவ்வாறு 3 மாதங்கள் கடந்துள்ளது. பின்னர், மாமியார் தரப்பில் வரதட்சணை கேட்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது மிகவும் உச்ச கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் சில நாட்களுக்கு முன்பு, சுருதி தனது தாயாருக்கு மாமியார் செய்து வரும் கொடுமைகள் குறித்து வாட்ஸ் அப் மூலம் தகவல் கொடுத்து உள்ளார். இதனை அறிந்த சுருதியின் தந்தை பாபு, தனது குடும்பத்துடன் மகளைப் பார்பதற்காக வந்து கொண்டு இருந்துள்ளார். அப்போது, சுருதியின் கணவர் கார்த்திக்கின் உறவினர் ஒருவர், சுருதியின் தந்தை பாபுவுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, உங்கள் மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும், அவரது உடல் நாகர்கோவில் அடுத்த ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளது என்றும் கூறி உள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சுருதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், கோவையில் இருந்து மீண்டும் குமரி மாவட்டம் வந்துள்ளனர். மேலும், தனது மகளை வரதட்சணை கொடுமையால் மாமியார் சித்திரவதை செய்து கொன்று விட்டனர் எனவும், இது தற்கொலை இல்லை கொலை என பெற்றோர், சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், திருமணமாகி ஆறு மாதங்களே ஆகியுள்ள நிலையில், அவரது வீட்டில் சுருதி தற்கொலை செய்து கொண்டதால், தற்போது ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதனிடையே, தற்கொலை செய்வதற்கு முன்பு வாட்ஸ் அப் மூலம் தனது தாய்க்கு சுருதி அனுப்பிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி கடும் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது.

அந்த ஆடியோவில், “எனக்கும் எனது கணவருக்கும் இந்த நாள் வரை எந்த பிரச்னையும் வந்ததில்லை. எல்லா பிரச்னையும் என் மாமியாரால் தான் வருகிறது. கணவர் சாப்பிட்ட பிறகு தான் நான் சாப்பிட வேண்டுமாம். என் கணவர் பக்கத்தில் நான் உட்காரக் கூடாது எனக் கூறுகிறார். தமிழ்நாட்டு கலாச்சாரப்படி என்னடைய இறுதிச் சடங்கை நிறைவேற்றுவதாக சொல்லி யாராவது வந்தால், அது தேவையே இல்லை. அப்படி செய்ய விடாதீர்கள். இவர்களின் கலாச்சாரத்தில் எனக்கு எதுவும் செய்ய வேண்டாம். மின்தகன மேடையில் வைத்து சுவிட்ச் ஆன் செய்து விட்டாலே போதும். இவர்கள் கட்டுப்பாட்டின் படி ஒன்றும் செய்துவிட வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நண்பனின் மனைவியுடன் தீரா காதல்.. உச்சத்திற்கு சென்ற தகாத உறவு.. இளைஞர் பரிதாப பலி!

மேலும், “திருமணம் நடந்த சில நாட்களிலேயே எனது மகள் மாமியார் கொடுமைக்கு ஆளானார். கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக சுருதி பணிபுரிந்து வந்தார். இறுதியாக வாயஸ் மெசேஜ் அனுப்பினார். இதன் பிறகு அவர் எதுவும் செய்யவில்லை. அப்போது தண்ணீர் திறந்துவிடும் சத்தம் கேட்டது. எனவே, அவள் கை ஏதாவது அறுத்திருப்பாளோ என்று எண்ணிணோம். அவருடைய உறவினர்கள் பலருக்கு கால் செய்தும், அவர்கள் அழைப்பை எடுக்கவில்லை. எனது மக்கள் உயரம் குறைவுதான். எனவே, அவரது இறப்பில் சந்தேகம் உள்ளது. எனது மகள் இறப்பிற்கு நியாயம் வேண்டும்” என சுருதியின் தந்தை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில், உயிரிழந்த சுருதியின் மாமியார் செண்பகவல்லி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தொடர்ந்து, அவர் சிகிச்சையில் உள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

9 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

9 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

9 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

10 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

11 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

12 hours ago

This website uses cookies.